இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பிற உயிர்களிடம் அன்பு செலுத்துவோம், குடும்பத்தாரை அரவணைத்துச் செல்வோம், உற்றார் உறவினருடன் ஒன்றுபட்டு வாழ்வோம், நண்பர்களுடன் இயன்ற பொழுதெல்லாம் கலந்து மகிழ்வோம். துன்பப்படுவோர்க்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம். அகந்தையை அகற்றி அன்பும் பாசமும் மேலோங்க இன்புற்று வாழ்ந்து தன்னிறைவு பெறுவோம்.
உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்!
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்!
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்!
பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டைப் பெருக்கட்டும்!
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்!
பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டைப் பெருக்கட்டும்!
கலகங்கள் போட்டிபகை கடந்தாட்சி நடக்கட்டும்!
கல்லாமை,கடன்,வறுமை களங்கங்கள் மறையட்டும்!
நல வாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞானம் ஒளி வீசட்டும்!
நம் கடமை அற வாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்!’’
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
ஆயிரமாண்டு நிறைவு
2010 செப்டம்பர் 25, செப்டம்பர் 26-ந் தேதி
தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954&ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி 1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 4&வது கவர்னரான சர் பெனகல் ராமாராவ், அதில் கையெழுத்திட்டார். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின. மும்பையில் அச்சிடப்பட்ட நோட்டுகளின் வரிசை ஆங்கில எழுத்து ஏ ஆகும்.
தமிழ்புத்தாண்டு ராசிபலன்காண