தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Tuesday, December 31, 2013

                                                            இரங்கல் 
                               
                                      

அவினாசி கோட்ட துணைத்தலைவர் திரு.அப்துல் சலீம் (சேயூர் தெற்கு பிரிவு அலுவலகம்) அவர்களின் மச்சான் (சகோதரியின் கணவர்) திரு.சையத் பசீர் அகமத்  மாரடைப்பால் 30.12.2013 அன்று காலமானார்.அண்ணாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவனடி சேரவேண்டிக்கொண்டும் , அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

                                                      இப்படிக்கு ,
அணைத்துக் கோட்ட பொறுப்பாளர்கள்,மற்றும் தொழிலாளர்கள்.
தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் ,
                                                 திருப்பூர் வட்டம்.

Monday, November 11, 2013

              ஐ .டி .ஐ  தொழிற்கல்வி பயின்றவர்கள் நேரடி தேர்வு.


                                         வாழ்த்தி வரவேற்கிறோம்.


         மின்துறையின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி என்ற சூழலில் மின் துறையை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டிய கட்டாயமும், மின் உற்பத்தியை பெருக்கிடவும் மாண்புமிகு தமிழக  முதல்வவர் அம்மா அவர்களின் கனவான தடையற்ற மின்சாரம், தரமான மின்சாரம் வழங்கிட மின்வாரியத்தின் கட்டமைப்பை பலப்படுத்திட வேண்டிய அவசியத்தை உணர்ந்து சங்கத்தின் பெரும் முயற்சியால் 4000  ஐ .டி .ஐ  தொழிற்கல்வி பயின்றவர்களை  நேரடி தேர்வு மூலம் தேர்வு செய்திட முடிவு செய்து நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு வந்திருக்கிற சகோதர சகோதரிகளை அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறோம்.உங்களது வருகை மற்ற நிறுவனங்களைப் போல சராசரி நிகழ்வு அல்ல, அது ஒரு நீண்ட , நெடிய போராட்ட வரலாறு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஐ .டி .ஐ  தொழிற்கல்வி பயின்றவர்களை  நேரடி தேர்வு மூலம் தேர்வு செய்திட எதிர்த்து நிதிமன்றத்தில் வழக்கு தொடுத்த தொழிற்சங்கங்களை இனம் கண்டு கொள்ளுங்கள். உங்களின் உணர்வுகளுக்கு புரிந்துணர்வோடும், அர்பணிப்பு உணர்வோடும் செயல்பட்டு வரும் தொழிலாளர் ஐக்கிய சங்கம் உங்களை வாழ்த்தி வரவேற்கிறது.

                                                               







Monday, April 29, 2013

மேதின நிகழ்ச்சி நிரல்

                                                 மேதின நிகழ்ச்சி நிரல்

மேதின கொடியேற்றும் நிகழ்ச்சிகள் கீழ்க்கண்டவாறு நடைபெற உள்ளதால் அணைத்து உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

காலை 08.00 மணி     அவினாசி கோட்டம்               

காலை 09.00 மணி      பல்லடம் கோட்டம்

காலை 10.30 மணி      திருப்பூர் கோட்டம் .

                           இப்படிக்கு 

                        த.சீனுவாசன்,

        வட்ட செயலாளர் , திருப்பூர் வட்டம் 

Saturday, April 27, 2013

                                            மேதின விழாவிற்கு தயாராகுவோம் 



மேதின நாளை சிறப்பாக கொண்டாட அணைத்து கோட்டங்களிலும் ஆவன
செய்ய கோட்ட பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
                                                      இரா.மனோகரன்.
                                       அமைப்பு செயலாளர்,திருப்பூர் வட்டம்.

Friday, March 29, 2013

கூட்டுறவு சங்க தேர்தல்

                                                  கூட்டுறவு சங்க தேர்தல் 

 தமிழ்நாடு  மின்சாரவாரிய திருப்பூர் கோட்ட
பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் 
சங்கம் எண் CP 114 தேர்தல் வேட்பு மனு தாக்கல்  
இன்று 29.03.2103 வெள்ளியன்று நடை பெற்றது.

அதில் ஐக்கிய சங்கம் (TPAS) ,பாரதிய மஸ்தூர் 
சங்கம்(BMS) , மத்திய  அமைப்பு (CITU ) 
தொ.மு.ச (TMTM ) பொறியாளர்கள்  சார்பாக
உறுப்பினர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
.                
 வேட்பு மனு தாக்கல் படிவம் வழங்குவதற்கு
 அதிகாரிகள் காலம் தாமதம் செய்ததால்
 உறுப்பினர்களிடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது.
  வேட்பு மனு தாக்கல் படிவம் கிடைக்கப்பெற்ற
 சிறிது நேரத்திலேயே வேட்புமனு தாக்கல் விறு விறுப்பாக நடைபெற்றது.
1.தா.சீனுவாசன். ஐக்கிய சங்கம்.TPAS                                  
2.D.கோபாலகிருஷ்ணன் ,மத்திய  அமைப்பு (CITU ) 
3.R.நாகராஜன் ,மத்திய  அமைப்பு (CITU ) 
4.S.நந்தகோபால்,பாரதிய மஸ்தூர் சங்கம்(BMS) 
5.N.கதிவேல், பாரதிய மஸ்தூர் சங்கம்(BMS)
6.P.பாபு, மத்திய  அமைப்பு (CITU ) 
7.R.ராஜன், ஐக்கிய சங்கம்.TPAS
8.N.கோபாலகிருஷ்ணன், ஐக்கிய சங்கம்.TPAS              
9.பாலகிருஷ்ணன்,மத்திய  அமைப்பு (CITU )                        
10.A.லதா,ஐக்கிய சங்கம்.TPAS 
11.S.சிவசங்கரி,மத்திய  அமைப்பு (CITU ) 
12.D.லச்சுமி,மத்திய  அமைப்பு (CITU ) 
13.R.உமாநாத்,தொ.மு.ச (TMTM ) 
14.C.செந்தில்குமார், AE 
ஆகியோர் மதியம் 01.30pm மணிக்குள்ளாக
வேட்புமனு தாக்கல் செய்தனர்.

   





 

                              









இரங்கல்

                                                                   இரங்கல் 

தமிழ் நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர்   ஐக்கிய சங்கத்தின் திருப்பூர்

வட்ட இணை செயலாளர்  திரு.M.சுப்பிரமணியம் அவர்களின் தாயார் 29.03.2013

அன்று காலமானார்கள் அம்மாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக்

கொண்டு திரு.M . சுப்பிரமணியம் அவர்களுக்கு ஆழ்ந்த  இரங்கலை 

தெரிவித்துக் கொள்கிறோம் .
                                                             இப்படிக்கு 

திருப்பூர் வட்ட பொறுப்பாளர்கள் , மற்றும் அணைத்து தொழிலாளர்கள்.

Wednesday, March 27, 2013

இரங்கல்

                                                                     இரங்கல் 


தமிழ் நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர்   ஐக்கிய சங்கத்தின் திருப்பூர்

வட்ட ம், திருப்பூர் கோட்டம் திருப்பூர் துணைமின் நிலையத்தில் பனி புரிந்த

நமது உறுப்பினர்   திரு.கருப்புசாமி மின்பாதை ஆய்வாளர்  அவர்கள்  27.03.2013

அன்று காலமானார்கள். அண்னாரின்  ஆன்மா சாந்தியடைய வேண்டிக்

கொண்டு திரு.கருப்புசாமி மின்பாதை ஆய்வாளர்  அவர்கள்

குடும்பத்திற்கு ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் .
                                                                                                     
                                                                இப்படிக்கு 

திருப்பூர் வட்ட பொறுப்பாளர்கள் , மற்றும் அணைத்து தொழிலாளர்கள்.

Friday, February 22, 2013



                       மாநில தலைவர் கைது நடவடிக்கையில் விடுதலை.
.
இன்று மதியம் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட மாநில தலைவர் திரு.அ.சுப்பிரமணியம் அவர்கள் காவல் துறையினரால் விடுதலை செய்யப்பட்டார் என்ற நல்ல  செய்தி மாநில துணை தலைவர் , மாநில இணை செயலாளர் ஆகியோரிடமிருந்து அலைபேசி குறுஞ்செய்தி வந்துள்ளது. ஒற்றுமையே வெற்றிக்கு வழிவகுக்கும்.
                             
                                                 

                                                       இங்கனம்
         
P.கார்த்திகேயன்,                 தா.சீனுவாசன்,                        R.மனோகரன்
வட்ட த்தலைவர்           வட்ட செயலாளர்              வட்ட அமைப்பு செயலாளர்.


மிகப்பெரிய வெற்றி.

                                         மிகப்பெரிய வெற்றி     

 இந்திய மத்திய அரசை 10 அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி   நேற்றும் இன்றும்  நடைபெற்றுக் கொண்டிருக்கும் அணைத்து துறை சார்ந்த அரசு ஊழியர்கள், மற்றும் வியாபாரிகள்,பொதுமக்கள் நடத்தும் பொது வேலை நிறுத்தத்தில் மாநில அளவில்  நமது ஊழியர்களில் நிரந்தர பணியாளர்கள் 28366 பேரும்  பகுதி நேர ஊழியர்கள் 5000 பேரும் ஒப்பந்த தொழிலாளர்கள் 5000 பேரும் கலந்து கொண்டு மிகப்பெரிய வெற்றியடைய செய்துள்ளனர். வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு சிறப்படைய செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் மாநில,திட்ட, வட்ட ,கோட்ட பொறுப்பாளர்களுக்கும் மிகப்பெரிய நன்றியை திருப்பூர் வட்டத்தின் சார்பில்  தெரிவித்து கொள்கிறோம் .
                                                   
                    தா,சீனுவாசன்,                                              
                  வட்ட செயலாளர்
                          மற்றும்
 அணைத்து கோட்டபொறுப்பாளர்கள் 

கைது நடவடிக்கை.

                                                  கைது நடவடிக்கை.


இன்று மதியம் நமது மாநில தலைவர்
அ .சுப்பிரமணியம் அவர்கள் ,பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு செய்தமைக்கு எதிராக தமிழக காவல்துறை கைது  செய்துள்ள செய்தியை மாநில துணைத்தலைவர்,மற்றும் மாநில இணை செயலாளர் குறுஞ்செய்தி தகவல் அனுப்பியுள்ளனர். 

         தடைகளை கடந்து வெற்றி காண்போம்.
                                                               
                                          என 
  திருப்பூர்  வட்ட தலைவர், செயலாளர், அணைத்து கோட்ட பொறுப்பாளர்கள்.                   



Thursday, February 21, 2013

பொது வேலை நிறுத்தம் வெற்றி

                                                                  வெற்றி 


இன்று மத்திய அரசிடம் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுதும் நடை பெற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் பங்கேற்றுறுள்ளது.இதில் நமது
தொழிலாளர்கள்  முழுமையாக கலந்து கொண்டு வேலை நிறுத்தத்தை வெற்றியடைய செய்துள்ளார்கள்.திருப்பூர் வட்டத்தில் 95 %
உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று
வெற்றியடைய செய்தமைக்கு நன்றி.

                                            இப்படிக்கு
                                                 
                                        தா.சீனுவாசன்                                       
                            திருப்பூர் வட்ட செயலாளர்

     திருப்பூர் ,வட்ட மற்றும் அனைத்து கோட்ட பொறுப்பாளர்கள் 






Thursday, February 14, 2013

பிப்ரவரி 20, 21 அகில இந்திய வேலை நிறுத்தம்:


 பிப்ரவரி 20, 21 அகில இந்திய வேலை நிறுத்தம்:

இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் உள்ள


முக்கிய சங்கங்கள் ஒன்றிணைந்து தேசம் காக்கும் 

போராட்டம் நடத்த திட்டமிட்டு  இருக்கின்றனர். 


HMS, CITU, AITUC, INTUC, BMS,  முதற் கொண்டு 

முக்கிய மத்திய சங்கங்கள்,  மத்திய அரசின் மக்கள்

விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக பிப்ரவரி 20

 மற்றும் 21 தேதிகளில் இரண்டு நாள் வேலை

நிறுத்தம் செய்ய அறைகூவல் விடுத்திருக்கின்றனர். 

பல கோடி தொழிலாளிகள் சங்கமிக்க இருக்கும் மிக

 உக்கிரமான போராட்டம் இது. நம் நாடு சுதந்திரம் 

பெற்ற பிறகு,மிக விரிவான தளத்தில் நடைபெற 

இருக்கும் மகத்தான தொழிற்சங்க வரலாற்று 


நிகழ்வு  இது.  மக்களை வாட்டி வதைக்கும் 

விலைவாசி உயர்விலிருந்து, தொழிலாளர்களுக்கு 

 பென்ஷன், போனஸ் உள்ளிட்டபலபிரச்சினைகளை 

முன்வைத்து இந்த இருநாள் வேலைநிறுத்தம் 


  நடைபெற இருக்கிறது.இதில் நமது தொழிற்சங்கம்


 வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அறிவிப்பு

05.02.2013 அன்று வாரியத்திற்கு கொடுத்துள்ளது.


கோரிக்கைகள்

1. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த 

வேண்டும்.


2. தொழிற்சங்க சட்டங்களை கறாராக 


    அமல்படுத்த வேண்டும்.


3. அணி திரட்டப்பட்ட/ திரட்டப்படாத 

தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப்  


பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

4. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் 


தாரை வார்ப்பது நிறுத்தப்பட வேண்டும்.

5. அவுட்சோர்சிங் நிறுத்தப்பட்டு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர 
     
     ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

6. குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கபட வேண்டும்.

7. போன்ஸ், பிராவிடண்ட் பண்ட் மற்றும் கிராஜுவிட்டியில் உள்ள உச்ச  
  
    வரம்புகளை நீக்க வேண்டும்.

8.அனைவருக்கும் போனஸ் உறுதி செய்யப்பட 

வேண்டும்.

                     
    
 இந்த வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச்                         

செய்யும் பொறுப்பும், அர்ப்பணிப்பும் நம் 

அனைவருக்கும் வேண்டும்.

                                                                        இப்படிக்கு 

          திருப்பூர் வட்ட மற்றும் அணைத்துகோட்ட பொறுப்பாளர்கள்.

20,21.02.2013 பொது வேலை நிறுத்த விடுப்பு விண்ணப்பம்

                                           தற்செயல் விடுப்பு விண்ணப்பம் 


பெயர்                                              ;


பதவி                                               ;


பணிபுரியும் பிரிவு                     ;


விடுப்பு தேவையான நாள்     ;      20.02.2013  மற்றும் 21.02.2013 இரண்டு    
                                                                       நாட்கள்   

விடுப்பிகான கரணம்                ;           நான் சார்ந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய 
                                                                      தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் 
                                                                      கடந்த 05.02.2013 அன்று வாரியத்திற்கு
                                                                      கொடுத்துள்ள அறிவிப்பின் படி மத்திய 
                                                                      அரசின் தவறான பொருளாதார 
                                                                      கொள்கையை எதிர்த்து நடைபெறும் 48 
                                                                      மணி நேர அகில இந்திய பொது வேலை 
                                                                      நிறுத்தத்தில் பங்கேற்க உள்ள 
                                                                      காரணத்தினால் 
                                                                     

நாள்            02.2013  
                                                                                              
                                                                                        வின்னப்பதாரர் கையொப்பம்.



Tuesday, February 5, 2013

இரங்கல்.

                                                                இரங்கல்.                                                                            
திருப்பூர் வட்ட தலைவர் திரு N .கார்த்திகேயன்  அவர்களின் மைத்துனர் அவர்கள் சாலை விபத்தில் காலமானார்கள்.

                                                                                                                                                                                                                                                                          
              திருப்பூர் வட்ட தலைவர் திரு N .கார்த்திகேயன் அவர்களின் மைத்துனர் 04.12.2013 அன்று சாலை விபத்தில் காலமானார்கள். அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி கொண்டு திருப்பூர் வட்ட தலைவர் அவர்களுக்கு ஆழ்ந்த   இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
                                     இப்படிக்கு 
        திருப்பூர் வட்ட மற்றும் அனைத்து கோட்ட   
        பொறுப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள்.

        


Saturday, January 26, 2013

செயற்குழு கூட்டம்

                                                                   செயற்குழு கூட்டம்
அன்புடையீர்,

வருகின்ற  27.01.2013 அன்று கோவை மண்டல செயற் குழு கூட்டம் கோவை டாட்டாபாத் போயர் மகாலில் நடைபெற இருப்பதால் அணைத்து கோட்ட உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.   
                                                                     
                                                                                          த.சீனுவாசன் 
                                                                          செயலாளர் / திருப்பூர் வட்டம்.

Monday, January 14, 2013

பொங்கல் வாழ்த்துக்கள்

                                                         பொங்கல் வாழ்த்துக்கள் 





Tuesday, January 1, 2013

2013 புத்தாண்டு வாழ்த்துக்கள்

2013 ஆம் வருடம் முழுதும் இனிதாய் அமைய 
தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் அன்புடன்  வாழ்த்துகிறது.