இந்திய மத்திய அரசை 10 அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்றும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அணைத்து துறை சார்ந்த அரசு ஊழியர்கள், மற்றும் வியாபாரிகள்,பொதுமக்கள் நடத்தும் பொது வேலை நிறுத்தத்தில் மாநில அளவில் நமது ஊழியர்களில் நிரந்தர பணியாளர்கள் 28366 பேரும் பகுதி நேர ஊழியர்கள் 5000 பேரும் ஒப்பந்த தொழிலாளர்கள் 5000 பேரும் கலந்து கொண்டு மிகப்பெரிய வெற்றியடைய செய்துள்ளனர். வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு சிறப்படைய செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் மாநில,திட்ட, வட்ட ,கோட்ட பொறுப்பாளர்களுக்கும் மிகப்பெரிய நன்றியை திருப்பூர் வட்டத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம் .
தா,சீனுவாசன்,
வட்ட செயலாளர்
மற்றும்
அணைத்து கோட்டபொறுப்பாளர்கள்