தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Wednesday, March 19, 2014

        அவினாசி கோட்ட புதிய கள  உதவியாளர் அறிமுக விழா 

                                       ஐக்கிய சங்க பொன்விழா 

          
              அவினாசி கோட்டத்தில் புதிய கள  உதவியாளர் அறிமுகவிழா மற்றும் ஐக்கிய சங்க பொன்விழா 19.3.2014 அன்று செயற்பொறியாளர்  / அவினாசி அலுவலகத்திற்கு அருகில் உள்ள கிங்டம் மழலையர் பள்ளியில் மாலை ஐந்து மணிக்கு சிறப்பாக நடை பெற்றது. அதில் புதியதாக பதவியேற்பு செய்த கள உதவியாளர்கள்   (பயிற்சி) ,  மற்றும் அவினாசி , பல்லடம்   திருப்பூர் கோட்ட  நிர்வாகிகள் நிர்வாகிகள் மற்றும் திருப்பூர் வட்ட நிர்வாகிகள்  மற்றும் கோவை மண்டல செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் முதலில் இனிப்பு வழங்கி விழா துவங்கியது                    
                                           .          
       
         விழாவிற்கு திரு அ .லோகநாதன் தலைவர் அவினாசி கோட்டம்  தலைமை வகித்து பேசினார். திரு M .சுப்பிரமனியம் திட்ட இணை செயலாளர் அவர்கள் வரவேற்ப ரையாற்றி பேசினார். அவினாசி கோட்ட  செயலாளர் திரு N.உமாபதி, துணைத்தலைவர் திரு  A.அப்துல்சலீம் , திரு கிருஷ்ணன், மகளிரணி செயலாளர் திருமதி A.லதா, வட்டத் தலைவர் திரு N.கார்த்திகேயன், வட்ட அமைப்பு செயலாளர் திரு.R.மனோகரன் ஆகியோர் விளக்கவுரையாற்றி பேசினார்கள். திரு.த.சீனுவாசன் வட்ட செயலாளர் அவர்கள் சிறப்புரை யாற்றினார். மண்டல செயலாளர் திரு.R .கண்ணன் அவர்கள் பேருரையாற்றிப்  பேசினார்.

                  விழாவில் பேசிய அனைவரும் ஐ.டி .ஐ படித்தவர்களை வாரியப் பணியில் சேர்க்க ஐக்கிய சங்கம் கடந்த பதினேழு ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தைப் பற்றியும் , அந்த காலகட்டத்தில் ஐ.டி.ஐ படித்தவர்களை வாரியப் பணியில் சேர்க்க  விடாமல் அரசியல் மூலமாகவும் , நீதிமன்றம் மூலமாகவும்  தடைகளை ஏற்படுத்தி வந்தவர்கள் இன்று ஐக்கியசங்கத்தின் தொடர் முயற்சியால் பணிக்கு சேர்ந்தவர்களிடம் பணிக்கு சேர்ந்த முதல் நாளிலேயே நாங்கள்தான் உங்களுக்கு பணியேற்க  வகை செய்தோம் என்று பச்சைப் பொய் பேசி சந்தா நன்கொடை  என வசூல்   செய்த    வெக்கக்கேடான செயல் பற்றியும், அவர்களுக்கு இதில் ஒரு அருகதையும் கிடையாது என்பதையும், ஐக்கிய சங்கம் ஒன்றிற்கே அந்த தகுதி உள்ளது என்பதையும் தெளிவாக விளக்கிப் பேசினர்.  மேலும் புதிய கள  உதவியாளர்களும் இது எங்களுக்கும் தெளிவாக தெரியும் என்றும் நாங்கள் என்றும் ஐக்கிய சங்கத்தின் உறுப்பினர்கள்தான் என்றும் அதன் தியாக உணர்ச்சியை என்றும் நினைவில் கொள்வோம் என்றும் உறுதி கூறினர்.
        
                இறுதியாக திரு.K .P .ராஜேந்திரன் பல்லடம் கோட்ட தலைவர்  அவர்கள் மேற்கண்ட சங்கங்களின் செயல்களுக்கு ஆதாரங்கள் அளித்து நன்றியை நவில விழா இனிதே நிறைவுற்றது.