தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Friday, May 2, 2014


வாழ்த்துக்கள். 

பதவி உயர்வு பெற்ற ஐக்கிய சங்க அடலேறுகளுக்கு வாழ்த்துக்கள். ஐக்கிய சங்க அடலேறுகள்  வெறும் பஞ்சு மூட்டைகள் அல்ல வைரகற்கள் - தர்மம் வென்றது.

நமது சங்கத்தின் கடும் போராட்டத்தின் முயற்சியால் 2009 ல் 
 ஐ. டி .ஐ தொழில்நுட்பகல்வி பயின்று மின்வாரியப் பணிக்கு சேர்ந்த அடலேறுகளே உங்களது பதவி உயர்வுக்கு குள்ளநரி தந்திரம் கொண்டோர்கள் , ஓநாய் குணம் படைத்தவர்கள் நீதிமன்றம் மூலம் தடை செய்து வயிற்றில் அடித்தவர்கள் தோற்றுப் போனார்கள் .

            நீதி தேவதை நம் பக்கம் . எத்தனை எத்தனை ஏளனப்பேச்சு ! நையாண்டி ! பச்சோந்தி வண்ணம்! எல்லாம் கண்டு கொண்டீர்கள். அனைத்து தடைகளையும் தாண்டி வெற்றி கண்டு பதவி உயர்வு பெற்று பதவியேற்பு செய்த 

ஐக்கிய சங்க அடலேறுகளுக்கு வாழ்த்துக்கள்


ஐக்கிய சங்கம் ஓர் அற்புத ஆலயம். எத்தனை புயல்களையும் தாங்கி நிற்கும்.இங்கு சலியாத மனமும் , அயராத உழைப்பும் , அகலாத அன்பும் , மாறாத ஒழுக்கமும் எப்போதும் தவழும் . நீங்கள் இதில் லயித்து மகிழ்ந்து வாழ்க வளமுடன் .